Friday, July 27, 2007

பழமொழி : "ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்"

வெளிப்படை விளக்கம் : ஒரு வைத்தியர் தனது மருந்துகளால் பலரினை இறக்கச் செய்திருந்தாரானால்தான் அவர் ஒரு வைத்தியர் ஆவார்.
உண்மை விளக்கம் : குறிப்பிடத்தக்களவு மரம், செடி மற்றும் கொடிகளின் வேர்களினை (அதன் பண்புகளை) அறிந்தவன் வைத்தியம் செய்வதற்குரிய அறிவினைப் பெறுகிறான்.
உண்மை விளக்க விளக்கம் : உண்மையில் இந்த பழமொழி திரிபடைந்துவிட்டது. இதன் மூலப் பழமொழியானது "ஆயிரம் வேரைக் கண்டவன் அரை வைத்தியன்" ஆகும்.

No comments: